நாடாளுமன்றில் மன்னிப்பு கோரிய ரஞ்சன் !

1 Ranjan R
1 Ranjan R

எனது தொலைபேசியை எடுத்துச் சென்ற பொலிஸ் எனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டது. எனது செயற்பட்டால் பாதிப்படைந்த அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்.

வேண்டுமென நான் எதனையும் செய்யவில்லை. என்னால் யாரும் பாதிப்படைய கூடாது.

எனது பாதுகாப்புக்காக நான் இவற்றை செய்தேன்.

.எனது போராட்டம் தொடரும்.அரசின் பக்கமிருந்து என்னிடம் பேசியோரின் விபரங்களை நான் இந்த சபையில் தைரியமாக சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

என்னிடம் அவர்களின் பிரச்சினைகளை சொன்ன அரச தலைவர் முதல் மற்றும் முக்கியமானவர்கள் அதில் உள்ளனர்.பேசுவதை மறப்பவர்கள் செய்ததை மறுப்பவர்கள் இந்த நாட்டில் இருப்பதால் தான் நான் அனைத்தையும் பதிவு செய்தேன்.சாட்சிக்காக அதனை வைத்தேன்.கள்ளர்களை வீட்டுக்கு அனுப்ப நான் யாரிடமும் பேசியதில்லை.என அவர் குறிப்பிட்டுள்ளார் .