நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒரு தற்காலிய நியமனமே தவிர அது நிரந்தரமானதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பதுளை வெளஸ்ஸவில் அமைக்கப்பட்ட வீதியை நேற்று (21) திறந்து வைக்கும் நிகழ்விலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“அவ்வாறான நியமனத்தை மக்கள் வழங்கும் போது அதன் பதவிகாலம் வெறுமனே ஐந்து வருடங்கள் என்பதை உணர்ந்துக்கொண்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.
அதற்கமைவாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகாலத்தை மீள புதுபிக்கும் காலம் வந்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.