குப்பை மேட்டினை அகற்றும்படி வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

DSC 0011 3 300x200
DSC 0011 3 300x200

வவுனியா புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள குப்பை மேட்டினை அகற்றும்படி, பிரதேச மக்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (22) காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த குப்பை மேட்டில் வவுனியா நகர எல்லைக்குற்பட்ட குப்பைகள், வைத்தியசாலை கழிவுகள், போன்றவற்றினை பார ஊர்திகள் மூலம் கொண்டு வந்து பாதுகாப்பற்ற முறையில் வீசுவதுடன், தீ மூட்டப்படுகின்றன.

இதிலிருந்து வெளியாகும் கருமையான புகையினால், பல்வேறு சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுவதுடன், மழை காலங்களில் அதிகளவு துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை வவுனியா நகரிலிருந்து வாகனங்களில் கொண்டுவரும் கழிவுகளை உள்ளே, அனுமதிக்க மாட்டோம் என தெரிவிக்கும் அவர்கள், தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடப் போவதாகவும் தெரிவித்தனர்.

கடந்த வருடமும் குறித்த மக்களினால் இதே போன்றதொரு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகளின் உறுதிமொழிக்கமைய கைவிடப்பட்டிருந்தது.

தீர்வு கிடைக்காத நிலையில் ஒரு வருடத்திற்கு பின்னர் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.