வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் கையளிப்பு

IMG 6254
IMG 6254

மன்னார் மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான வெள்ளாங்குளம் சேவா கிராமத்தில் வெள்ளம் மற்றும் வரட்சியினால் பாதிக்கப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

நேற்று மாலை(21) 5.00 மணியளவில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவின் ஏற்பாட்டில் அதன் குழு தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிவாரண பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில் சட்டத்தரணி புராதனி மற்றும் மெசிடோ நிறுவன ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.