அவுஸ்ரேலியாவின் தலைநகர் கான்பராவில் இன்று (23) திடீரென காட்டுத்தீ பரவியுள்ளதாக தெரியவருகின்றது.
கான்பரா விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5 மணி நேரமாக காட்டுத்தீ பரவியுள்ளதாகவும் அதனை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக அங்கிருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இந்த காட்டுத்தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை
இதேநேரம் அவுஸ்ரேலியாவில் பல மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட காட்டு தீயினால் பல்லாயிரக் கணக்கான உயிரினங்களும் 25 இற்கு மேற்பட்டவர்களும் பலியாகியதுடன் 14.5 மில்லியன் ஏக்கர் நிலம் தீக்கிரையாகியுள்ளதாக கூறப்படுகின்றது.