மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் யசந்த கோதாகொடவை உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டு மார்ச 28ம் நாள் முதல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட கடமையாற்றி வருகின்றார்.
உயர் நீதிமன்ற நீதியரசர் பிரசன்ன ஜயவர்த்தனவின் திடீர் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே நீதியரசர் யசந்த கோத்தாகொடவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்க ஜனாதிபதி பரிந்துரைத்தார்.