யாழில் சிங்கள மாணவியிடம் கொள்ளை!

theif
theif

பல்கலைகழக மாணவியை வழிமறித்து கொள்ளையிட்ட சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது.

யாழ் பல்கலைக்கழக சிங்கள மாணவி ஒருவா் தனது விடுதிக்கு சென்று கொண்டிருக்கையில் திருநெல்வேலி – சிவன் அம்மன் கோவில் பகுதியில் மாணவியின் பணம் மற்றும் கைதொலைபேசி உள்ளிட்ட பொருட்களை குறித்த கும்பல் பறித்துச் சென்றுள்ளது.

மாணவியில் கைப்பையில் இருந்த விலை உயா்ந்த தொலைபேசி, 7500 ரூபாய் பணம், வங்கி அட்டைகள், பல்கலைகழக மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியன பறித்து செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடா்பாக மாணவி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.