சுகாதார தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தீர்வு

jaffna mn
jaffna mn

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட யாழ் மாநகர சபை சுகாதார தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பியுள்ளனர்.

நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை மாநகர சபை முன்பாக ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில் போராட்டத்தின் மூன்றாம் நாளான நேற்று (24) வட மாகாண ஆளுநருக்கும் சுகாதாரத் தொழிலாளர் சங்கத்தினருக்கும இடையே சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.

இதன் போது எட்டப்பட்ட முடிவிற்கமைய சுகாதாரத் தொழிலாளர்கள் கடமைக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.