கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, 10 நாட்களில் 1,000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை அமைக்க சீனா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 26 ஆக உயர்ந்துள்ளது. யுவான் நகரையும் தாண்டி இந்த வைரஸ் பரவி 830 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது மேலும் பரவாமல் இருப்பதற்காக 5 நகரங்களில் இலட்சக்கணக்கான மக்கள் தற்போது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் படுவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க, அந்நாட்டில் விரைவாக புதிய மருத்துவமனை ஒன்றை அமைக்க சீன அரசாங்கம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றது.
மேலும் புதிதாக அமைய உள்ள இந்த மருத்துவமனை 10 நாட்களுக்குள் 25,000 சதுர மீட்டரில் 1,000 படுக்கைகளுடன் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.