பப்ஜி விளையாடிய இளைஞர் பரிதாபகரமாக உயிரிழப்பு!

Pubg
Pubg

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் பப்ஜி விளையாடிய இளைஞருக்கு பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதுவரை வெளிவந்த கைத்தொலைபேசிகளின் ‘கேம்’களிலேயே உயர் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதால் இளைஞர்கள், கல்லூரி பெண்கள் மத்தியில் ‘பப்ஜி’ விளையாட்டு மோகம் அதிகரித்துள்ளது.

அந்தவகையில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் ஆக்ரோஷமாக பப்ஜி விளையாடியபோது பக்கவாதம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்ட வைத்தியர்கள் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

தொடர்ந்தும் சிகிச்சைகளை மேற்கொண்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்தார்.

இளைஞர்கள் பப்ஜி விளையாட்டு மட்டுமின்றி எந்த விளையாட்டாக இருந்தாலும் அதிக நேரம் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.