தானியங்கி இரத்தப்பரிசோதனை ரோபோ – உரிமைகோரும் கல்விநிலையம்

119
119

அண்மையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவியொருவர் இரத்தப் பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்துள்ளார்.

மாணவியின் கண்டுபிடிப்பு தொடர்பில் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் மாணவி தனது தனியார் கல்லூரியின் மாணவியெனவும், தமது கல்லூரியுடாகவே தொழிநுட்ப அறிவினை பெற்று இரத்தப் பரிசோனைக்காக இரத்தத்தினை நோயாளியிடம் இருந்து பெறுவதற்கான தானியங்கி முறைமையை கண்டுபிடித்ததாகவும் குறித்த தனியார் கல்லூரியின் இயக்குனர் அதிபரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் இயக்குனர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் ப.கமலேஸ்வரிக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பாடசாலை அதிபர் நேற்றிரவு வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.