“தமிழ் மக்களுக்கானத் தீர்வுப் பொதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தட்டில் வைத்துத் தருவார் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கனவு காண்பதில் எந்தவிதப் பயனும் இல்லை.
முதலில் அவர்கள் எம்மிடம் நேரில் வந்து பேச வேண்டும்.
இவ்வாறு சபை முதல்வரும் வெளிவிவகார அலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.