கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சீனப் பெண்ணொருவர் உட்பட இருவர் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் இரத்த மாதிரிகள் பொரளையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உள்ளூர் பெண். பாதிக்கப்பட்ட மற்றையவரான சீனப் பெண், சில நாட்களின் முன்னர்தான் சீனாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவர் தொடர்பிலும், சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.
இந்நிலையில் சீனாவிலுள்ள இலங்கையர்களை பாதுகாக்கும் வகையில் அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் விசேட ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.