கிளிநொச்சி வர்த்தகரின் உணவு ஒறுப்புப் போராட்டம் நிறைவு

kili
kili

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையினால் 10 சதவிகித ஆதனவரிக்கு எதிர்ப்பு தெரிவித்து உணவு ஒறுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிளிநொச்சி வர்த்தகர் தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

ஒரு வாரத்திற்குள் பிரதேசசபை விசேட அமர்வில் ஆதன வரி விடயம் குறித்து விவாதிக்கப்படும் என எழுத்துமூல கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதியை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டார்.

குறித்த கடிதத்தை கையளித்த உப தவிசாளர் நீர் ஆகாரத்தையும் வழங்கி போராட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகரின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.