ஓய்வு ஊதியக்காரர்கள் உயிருடன் வாழ்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கைவிரல் அடையாளம் பெறும் திட்டம் ஒன்று நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கான அனைத்து வசதிகளையும் ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.ஜயத்த டீ டயஸ் தெரிவித்துள்ளார்.
பிரதேச செயலகங்கள் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக் கொடுக்கும் தனியார் மற்றும் அரச வங்கிக் கிளைகளில் கைவிரல் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளன.