நாளாந்தம் 250 மில்லியன் நஷ்டம் அடையும் மின்சாரசபை

1 se
1 se

இலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது கட்ட பணியை அமுல்படுத்த தாமதமாவதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

நேற்றையதினம் பெற்றோலிய அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

அத்துடன் இந் நிலையத்தின் மூன்றாவது கட்ட பணிகள், மற்றும் கெரவலபிட்டி எல்.என்.ஜி மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும் 600 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புக்கு கிடைக்கவுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.