29ஆம் நாள் முல்லைத்தீவில் போராட்டம்!

Mullai CI
Mullai CI

முல்லைத்தீவில் இம்மாதம் 29 நாள் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் மருத்துவர்களின்மைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.

குறித்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனை வாயிலை மறித்து இடம்பெறவுள்ளது.

இந்த போராட்டத்துக்கான அறிவிப்பை முல்லைத்தீவு நகர அபிவிருத்தி ஒன்றிய வர்த்தக சங்கத்தினர், பேருந்து சங்கத்தினர், பொது அமைப்புக்கள், பொதுசந்தை சங்கத்தினர், கிராம அமைப்புக்கள் ஒன்றிணைந்து விடுத்துள்ளனர்.