இந்திய குடியரசு தினமான இன்று (26) டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி உயிர்நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் உடனிருந்தார். அவரை தொடர்ந்து முப்படை அதிகாரிகளும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.