பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கட் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்குமிடையில் நேற்று (25) இடம்பெற்ற 2வது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தீர்மானித்தது.
பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
பங்களாதேஷ் சார்பில் தமிம் இக்பால் 56 ஓட்டங்களையும், அபிப் குசைன் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் மொஹமட் ஹஸ்நைன் 2 விக்கட்டுக்களையும், ஷஹீம் அப்ரிடி, ஹரிஸ் ரவூப், சதாப் ஹான் தலா ஒரு விக்கட்டினை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 16.3 ஓவர்களில் 1 விக்கட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அசாம் 66 ஓட்டங்களையும், ஹபீஸ் 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
ஆட்டநாயகனாக பாபர் அசாம் தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
தொடரின் கடைசி போட்டி நாளை (27) இடம்பெறவுள்ளது.