நாட்டில் கொரோனா வைரஸினால் எவரும் பாதிக்கப்படவில்லை

corona
corona

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்ட நால்வரும், குறித்த வைரஸ் தாக்கத்திற்கு உட்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கொடை தொற்றுநோய்ப் பிரிவினால் பொரளை மருத்துவ பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்ட நால்வரின் இரத்த மாதிரி பரிசோதனைகளில் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அது குறித்து தொடர்ந்தும் பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாக வைத்தியர் ஜயருவன் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸினால் எவரும் பாதிக்கப்படவில்லை என்பதையும் பொரளை மருத்துவ பரிசோதனை நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த நால்வரும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.