சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு!

111 1
111 1

கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் விசேட கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதுடன் 1700 பேருக்கு அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவர்களில் 237 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படும் நோயாளர்கள் அமெரிக்கா, பிரான்ஸ், தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனா கடுமையான நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதாகவும், பல நகரங்களின் அன்றாட செயற்பாடுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படகிறது.