யாழ்ப்பாண ஐக்கிய வியாபாரச் சங்கத்தின் 100வது ஆண்டு நிறைவு விழாவும், மலர் வெளியீடும் இன்றைய தினம் (26) இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில், யாழ்ப்பாண ஐக்கிய வியாபாரச் சங்கத்தின் தலைவர், வைத்திய கலாநிதி எஸ்.நிமலன் தலைமையில் இடம்பெற்றது.
நூற்றாண்டு மலரினை சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் வெளியிட்டார்.
இவ்விழாவில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம், யாழ் மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன், ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், யாழ் போதனா வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நச்சினார்க்கினியர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்து.