யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகத்தின் சார்பில் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்தியக் குடியரசு தின நிகழ்வில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வருடமும் இந்திய சுதந்திர மற்றும் குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றன. அந்த நிகழ்ச்சிகளுக்கு அனைத்து கட்சியின் பிரமுகர்களும் கலந்துகொள்வது வழக்கம். இந்த நிகழ்ச்சிகளை கடந்த ஆண்டுவரை புறக்கணித்து வந்த கஜேந்திரகுமார் அணியினர், அந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களை ‘இந்தியக் கைக்கூலிகள்’ என விமர்சனம் செய்துவந்தனர்.
ஆனால் இவ்வருடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்தியக் குடியரசு தின நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.