வாய் புற்றுநோய் வராமல் தடுக்க இவற்றை செய்யுங்கள்

images 19
images 19

இன்றைய காலக்கட்டத்தில் ஆண்கள் அதிகமாக புகைபிடிப்பது,வெற்றிலை போடுவது போன்ற பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.

புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு, வாயின் உள்பகுதியில் புண் போல ஆரம்பிக்கும்.

அது கொஞ்சம் கொஞ்சமாக உதடு, கன்னம், தொண்டை, உணவுக் குழாய் என மற்ற எல்லாப் பகுதிகளையும் தாக்கி, மிக மோசமான வாய்ப் புற்றுநோயாக உருவெடுத்துவிடுகிறது.

இந்த புற்றுநோயிலிருந்து நமது உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் மாற்றம் செய்தாலே போதும் இதிலிருந்து விடுபட முடியும்.

வாய்ப்புற்று நோயிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என பார்ப்போம்.

தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.

புகையிலை மெல்லுவதை, புகைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

வாயில் சிறிய புண் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.

மஞ்சள், அடர் பச்சை நிறக் காய்கறிகள், கீரை, பூண்டு, திராட்சை, சோயா, தக்காளி போன்ற உணவுகளைச் சாப்பிடுவது புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரைச் சந்தித்து வாய் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.