தமிழில் குடமுழுக்கு கோரி கௌதமன் தலைமையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

gowthaman
gowthaman

தஞ்சை பெருவுடையார் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழ் பேரரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் வ.கௌதமன் தலைமையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

இன்று (31) காலை 11 மணியளவில் தஞ்சை பெருவுடையார் கோவிலில் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

எனவே தமிழக மக்கள் இதற்கான ஆதரவை நல்க வேண்டும் என கௌதமன் கோரிக்கை விடுத்துள்ளார்.