காத்தான்குடி கடற்கரையில், வெற்று பிளாஸ்டிக் போத்தல்களைச் சேகரிக்கும் மீன் வடிவிலான குப்பைத் தொட்டிகள், காத்தான்குடிக் கடற்கரையிலும் சிறுவர் பூங்காவிலும் வைக்கப்பட்டுள்ளன.
இவை, இன்று (31) மாலை தொடக்கம் பொதுமக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளன.
காத்தான்குடி ஆர்.எச்.சட் நிறுவனத்தினால், காத்தான்குடி பிரதேச செயலகத்தின் நிதியுதவியுடன் இத்தொட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவை, காத்தான்குடி நகர சபைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதுடன், இவற்றினுள் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள் கழிவுகளை, காத்தான்குடி நகர சபையால் மீள் சுழற்சிக்குட்படுத்தும் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன.