குரூஸ் நிறுவனம் போக்குவரத்துக்கு ஏற்றவகையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தின் மாதிரி வடிவமைப்பை வெளியிட்டுள்ளது.
குரூஸ் ஆரிஜின்” என்று பெயரிடப்பட்ட இந்த வாகனம் ஹோண்டா மோட்டார் கோ லிமிடெட் உடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
ஓட்டுநர் இல்லாமல் சுயமாக இயங்கும் இந்த கார்கள் சோதனைக்காக கலிபோர்னியாவில் வழங்கப்பட்டுள்ளது.
பொதுப்போக்குவரத்து சேவைக்காக வடிவமைக்கப்பட்டுள்ள குரூஸ் ஆரிஜின் வீதிகளில் மனிதக் கட்டுப்பாடு இல்லாது இயங்கக்கூடிய முழுமையான தொழிநுட்பத்தை கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.