244 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

005
005

இராணுவத்தைச் சேர்ந்த 244 அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விசேட உத்தரவின் பேரில் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

17 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாக தரமுயர்த்தப்பட்டவர்களில் அடங்குவதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

45 லெப்டினன்ட் கேர்ணல்கள் கேர்ணல்களாகவும், 49 மேஜர்கள் லெப்டினன்ட் கேணல்களாகவும், 42 கெப்டன்கள் மேஜர்களாகவும், 80 லெப்டினன்ட்கள் கப்டன்களாகவும், 11 இரண்டாம் லெப்டினன்ட்கள் லெப்டினன்ட்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிகாரிகளுக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.