இந்திய இராணுவத்தினரின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு

1549312564 894
1549312564 894

இந்திய இராணுவத்தினரின் ஓய்வுபெறும் வயதெல்லையை 58 ஆக அதிகரிப்பது தொடர்பில் பரிசீலித்து வருவதாக பாதுகாப்பு படைகளின் தளபதியான ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் பணியாற்றுபவர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 54 முதல் 58 ஆக இருக்கின்ற நிலையில், அவர்கள் 37 மற்றும் 38 வயதில் ஓய்வு பெறுகின்றனர்.

இந்த நிலையில், இராணுவத்தினரின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் பரிசீலித்து வருவதாக பிபின் ராவத் புதுடில்லியில் நேற்று(05) செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.