வவுணதீவு சம்பவம் தொடர்பில் இருவர் கைது

images 3 1
images 3 1

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று(06) காலை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களிடம் காவல்துறையினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணி பிரச்சினை ஒன்றின் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கும் என அனுமானிக்க முடிவதாக விசாரணைகளை மேற்கொள்ளும் காவல்துறை உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு – வவுணதீவு, மூன்றாம் கட்டை ஆயித்தியமலை வீதியில், குறித்த காவல்துறை அதிகாரியின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.

வாழைச்சேனை காவல்துறை நிலையத்தில் கடமையாற்றிய 55 வயதுடைய காவல்துறை உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.