யேமன் அல்-கொய்தா தலைவர் காசிம் அல்-ரிமி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
யேமனில் அமெரிக்காவினால் கடந்த வாரம் நடாத்தப்பட்ட தாக்குதலிலேயே அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2015 ஆம் ஆண்டு முதல் யேமன் அல்-கொய்தா குழுவிற்கு காசிம் அல்-ரிமி தலைமை தாங்கியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இறுதி காலப்பகுதியில் அமெரிக்கா நடாத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.