பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நசீர் ஜாம்ஷெட் தன் மீதான சூதாட்ட புகாரை மறுத்து வந்த நிலையில் அவர் குற்றவாளி என பிரித்தானியாவின் மான்செஸ்டர் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருக்கு 17 மாத சிறைத்தண்டனையை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர் மீது கடந்த 2018ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் விசாரணை நடத்தி, அவர் அனைத்துவிதமாக கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க பத்து ஆண்டுகள் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.