யாழ்.சாவகச்சேரி அரசடி சந்தியில் இன்று(10) காலை 8 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மகிழூர்தி ஒன்றுடன் உந்துருளியொன்று மோதியதாலே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.