அங்கொடை மனநல மருத்துவமனையில் விமல் வீரவன்சவை அனுமதியுங்கள்!

1 resized 2
1 resized 2

அமைச்சர் விமல் வீரவன்சவை, அங்கொடை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்ச காணாமல் ஆக்கப்பட்டோர்களை மண்ணுக்குள்ளிருந்துதான் தோண்டி எடுக்கவேண்டுமெனவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் விடுதலைப் புலிகளே என்பதான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

விமல் வீரவன்சவின் இக் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் நேற்றையதினம் 09.02 ஊடகசந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அதில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை பொறுப்புக்கூறலில் இருந்து நழுவுவதற்காக கூறப்படும் இத்தகைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமுடியாதெனவும், தற்போதைய அரசாங்கம்தான் அனைத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலும் உரிய பதிலை வழங்கவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.