வளா்ப்பு நாய்க்காக பேசியதால் வாள் வெட்டு

dog
dog

யாழ்ப்பாணம் – இளவாலை பாெலிஸ் பிரிவு, சாந்தை பகுதியில் வளா்ப்பு நாயினால் உருவான தா்க்கம் வாள்வெட்டில் முடிந்துள்ளது.

நேற்றுமுன்தினம்(09) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் மூவர் வாள்வெட்டுக்கு இலக்காகி தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது,

குறித்த பகுதியில் உள்ள நபா் ஒருவா் நாய் ஒன்றை வளா்த்து வந்துள்ளாா். குறித்த நாய் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளது.

இவ்வாறு சென்ற நாய் அடித்து துன்புறுத்தப்பட்ட நிலையில் குற்றுயிராக கிடந்துள்ளது. இதனையடுத்து நாயின் உாிமையாளா் கோபமடைந்து கடுமையான வாய்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார் .

இதனையடுத்து அயல் வீட்டார் குறித்த நாயின் உாிமையாளருடன் தா்க்கப்பட்டுள்ளனர் . இந்த நிலையில் அயல் வீட்டில் இருந்தவா்கள் நாயின் உாிமையாளா் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியிருப்பதுடன், அவருடைய வீட்டுக்குள் புகுந்தும் தாக்குதல் நடாத்தியுள்ளனா்.

இந்த சம்பவத்தையடுத்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.