தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடமாகாண விருது வழங்கும் நிகழ்வு நேற்று(10) மாலை 7 மணியளவில் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் சீனித்தம்பி மோகனராஜ்,விசேட விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் அரச திணைக்கள அதிகாரிகள்,வடமாகாணத்தைச் சேர்ந்த நிர்மாணத்துறை ஒப்பந்தகாரர்கள் உற்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த றேமன் குரூஸ்(டிலக்ஸ்) ,பி.வி.டக்ஸன் ஆகிய இரண்டு தேசிய நிர்மாணிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.