இதுவரை காலம் கல்முனை மாநகர சபையின் அதிகாரத்தின் கீழிருந்த சாய்ந்தமருது பிரதேசத்துக்கென தனியான புதிய நகர சபையொன்றினை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள், சாய்ந்தமருது பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள்,கல்முனை மாநகர சபையின் சுயேச்சைக்குழு (தோடம்பழ சின்னம்) உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அலரிமாளிகையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது கல்முனை வடக்கு உபபிரதேச செயலக காரியாலயத்தை தரமுயர்த்துவது தொடர்பான சிபாரிசுகளை முன்வைப்பதற்கென குழுவொன்றினை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.