தேர்­த­லுக்கு முன் சாய்ந்­த­ம­ருதுக்கு புதிய நகர சபை

7 nhg
7 nhg

இது­வரை காலம் கல்­முனை மாந­கர சபையின் அதி­கா­ரத்தின் கீழி­ருந்த சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­துக்­கென தனி­யான புதிய நகர சபை­யொன்­றினை நிறு­வு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

கிழக்கு மாகாண மக்கள் பிர­தி­நி­திகள், சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் பிர­தி­நி­திகள்,கல்­முனை மாந­கர சபையின் சுயேச்­சைக்­குழு (தோடம்­பழ சின்னம்) உறுப்­பி­னர்கள் மற்றும் அரச அதி­கா­ரி­க­ளுக்கும், பிர­தமர் மஹிந்த ராஜபக்ஷவுக்­கு­மி­டையில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போதே இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­ட­லின்­போது கல்­முனை வடக்கு உப­பி­ர­தேச செய­லக காரி­யா­ல­யத்தை தர­மு­யர்த்­து­வது தொடர்­பான சிபா­ரி­சு­களை முன்­வைப்­ப­தற்­கென குழு­வொன்­றினை நிய­மிப்­ப­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.