ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்னர் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவைக் கைது செய்ய அரசு முயற்சிகளை மேற்கொள்
கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணி யின் தலைமைக் காரியாலயத்தில்
நேற்று இடம்பெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான பலமாக அரசு நிச்சயம் இன்னும் இரு மாத காலத்துக்குள் தோற்றம் பெறும். பொதுஜன பெரமுன தற்போது தேர்தலின் வெற்றியை இலக்காகக் கொண்டு செயற்திட்டங்களை நாடு தழுவிய ரீதியில்முன்னெடுத்து வருகின்றது.
எதிர்த் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சார்பில் நேற்று முன் தினம் கட்டுப் பணத்தினையும் செலுத்தியுள்ளோம். இதுவரை எவ்வித பிரச சினைகளும் இல்லாமல் முறையாகத் தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்னர் பொதுஜன பெர
முனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயராஜபக்சவைக் கைது செய்ய அரசு தற்போது பாரிய முயற்சிகளை மேற்கொள்கின்றது – என்றார்.