சூரியவெவ , பத்தேவெவ பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண கொடுக்கல் வாங்கல் தொடர்பில் உயிரிழந்தவரின் சகோதரராலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த இளைஞர், சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.