மொட்டு கட்சிக்கு வாக்களித்த மக்கள் வெட்கத்தில்!

2 ara
2 ara

மொட்டு கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்கள் வெட்கப்படும் நிலைமைக்கு தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

பசறை கிகிரிவத்தையில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாசவை பிரதமராக்கி முழுமையான அரசாங்கம் ஒன்றை அமைப்பது உறுதி எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் பதுளை மாவட்டத்தில் உள்ள இரண்டு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை களவாடுவதற்கு ஒரு சிலர் முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த பெறுபேறுகளுக்கு முற்றிலும் மாறுப்பட்ட முடிவையே எதிர்வரும் தேர்தலில் மக்கள் வழங்குவார்கள் எனவும் அரவிந்த குமார் நம்பிக்கை வெளியிட்டார்.