கொரோனா வைரஸ்: உயிரிழப்பு எண்ணிக்கை 1600 எட்டியது!

1 ges
1 ges

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எணிக்கை 1600 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, கொரோனா வைரஸ் உருவாகியது என கூறப்படும் சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் நேற்று சனிக்கிழமை மட்டும் 139 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் ஹூபேயில் கோவிட் -19 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தாக்கத்தினால் புதிதாக 1,843 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 11 ஆயிரம் பேர் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த வைரஸ் 28 நாடுகளில் பரவியுள்ளதுடன் ஆசியாவை தாண்டி நேற்று ஐரோப்பாவில் முதல் மரணம் சம்பவித்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.