இன்றைய காலகத்திடம் சிக்கலானது , ஆனால் தமிழ் மக்கள் நான் அரச கட்சியில் இணைந்து போட்டியிடுவதை விரும்புகின்றனர் .
அரசுடன் இணையும்போதுதான் நாம் அபிவிருத்தியை அடைய முடியும் பழைய பிரச்சனைகளையோ தற்போதைய பிரச்சனைகளையோ மனதில் வைக்காமல் அரசுடன் இணைந்து அபிவிருத்தியை மேற்கொள்வதே சரியானது என நான் நினைக்கின்றேன் .
இந்த மக்களுக்கு அரசுடன் இணைந்து சேவை செய்ய முடியும் என்றால் அரசுடன் இணைந்து செயற்படுவதே சிறப்பானது என கருதுகிறேன் .
மக்களுக்காகவே நான் அரசுடன் இணைந்து இருக்கின்றேன் .
ஜெனீவா வரை சுந்தரும் நான் அரசுடன் இணைந்து அரசுக்கு ஆதரவாக நான் பேசவில்லை .நான் மக்களுக்கான நீதியில் இருந்து வழுவவில்லை .
தமிழ் மக்களை பொறுத்தவரை அரசுடன் இணைவதை மக்கள் விரும்புகிறார்கள் இல்லை ஆனால் அரசுடன் இணைவதனால்த்தான் எம்மால் சில அபிவிருத்திகளை மக்களுக்கு வழங்க முடிகின்றது.
என முல்லைத்தீவு மாவடட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினருமான சதாசிவம் கனகரட்ணம் எமது ஊடகத்தின் அறிவாயுதம் நிகழ்சசிக்காக வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார் .