பிரபல குளிர்பான நிலையத்தில் பணியாற்றிய இளைஞன் பலி

8 Power
8 Power

யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள பிரபல குளிர்பான விற்பனை நிலையத்தில் பணியாற்றிய இளைஞன் ஒருவர் , மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் தேவாலய வீதி சங்கானை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடையின் மேல்தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், பாதுகாப்பற்ற முறையில் சுற்றப்பட்டிருந்த மின்சார வடத்தில் கால் பட்டதால் இளைஞர் தூக்கி வீசப்பட்டு உள்ளார்.

இதனையடுத்து திடீரென மின்சாரம் தடைப்பட்ட நிலையில், அங்கு கடமையிலிருந்த பணியாளர்கள் மேல் தளத்துக்கு சென்று பார்த்தபோது குறித்த இளைஞன் தரையில் விழுந்து கிடந்துள்ளார்.

உடனடியாக இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர் .

இந்நிலையில் மரண விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனை பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.