தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்

8 ad 3
8 ad 3

மத்திய வங்கியின் பிணை முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று   மதியம் ஒரு மணிக்கு நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்நிலையில் இன்று ஆரம்பமாகவுள்ள தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான விவாதம் நாளை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பாக ஆங்கில மொழியிலான இருவெட்டுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் தமிழ் மற்றும் சிங்கள மொழியிலான மொழிபெயர்ப்புகள் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.

இது தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.

மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை, நாடாளுமன்ற அரசாங்க நிதிக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதிக் குழுவினூடாக இந்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய அரசாங்கக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்ற நிதிக்குழுவின் தலைவர் சுமந்திரன் தலைமையில் இன்று நிதிக் குழு கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.