சிரியாவில் துருக்கியின் கட்டுப்பாட்டு பகுதியில் வெடிகுண்டு தாக்குதல்

1 r
1 r

சிரியாவில் துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், படுகாயமடைந்த பலர் அருகிலுள்ள உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டெல் அபியாத் நகரில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் குர்து இன போராளிகளே இந்த தாக்குதலை நடத்தியதாக துருக்கி ராணுவம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

அத்தோடு, கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 2 பேரை கைது செய்திருப்பதாகவும் துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.

துருக்கி இராணுவம் சிரியா எல்லைக்குள் நுழைந்து குர்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே குர்து போராளிகள் இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.