தடயவியல் கணக்காய்வு அறிக்கை – 2 ஆம் நாள் விவாதம் இன்று

4 tt
4 tt

மத்திய வங்கியின் பிணை முறிகள் மோசடி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து இரண்டாவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று மதியம் ஒரு மணிக்கு நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, ஒத்திவைப்புவேளை விவாதத்திற்கான பிரேரணையாக நேற்று சபையில் சமர்பித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று ஆரம்பமாகியிருந்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான விவாதம் இன்றும் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.

மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை, நாடாளுமன்ற அரசாங்க நிதிக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதிக் குழுவினூடாக இந்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.