யாழ்ப்பாணம் தனியார் மருத்துவமனையில் பெண்களுக்கு இப்படியா நடக்கிறது !

1 ed 3
1 ed 3

யாழில் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மற்றும் தாதியர்கள் வைத்தியசாலையின் உரிமையாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது.

குடும்பப் பெண்களை அவ் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்வதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து இந்த தகவல் வெளியே கசிந்துள்ளது .

வைத்தியர் ஒருவருக்கு உரித்தான குறித்த வைத்திய சாலையில் 40 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிவ துடன் அவர்களில் அதிகமானவர்கள் இளம் பெண்கள் எனவும் சொல்லப்படுகின்றது.

ஒரு ஊழியரை நாளாந்தம் குறைந்தது 18 மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் வேலை வாங்கும் உரிமையாளர் அவர்களுக்கு கொடுக்கும் கொடுப்பனவு 12 ஆயிரம் ரூபா மட்டும் என அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் .

அதுமட்டுமல்லாது ஊழியர்களிடம் வாராந்தம் 6 நாட்கள் வேலை வாங்கும் வைத்தியர் அந்தப் பெண்களை தனது காம அடிமைகளாகவே பயன்படுத்த முற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.