சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்

0 gfg
0 gfg

கோமரன்கடவல பொலிஸ் பிரிவிற்கு கல்விச் சுற்றுலாவிற்கு சென்ற ஹாலிஎல பிரதேசத்தின் பாடசாலை ஒன்றை சேர்ந்த மாணவர்கள் குழுவொன்று மதவாச்சி வாவியில் நீராடிய போது அதில் 7 பேர் நீரில் மூழ்கியுள்ளனர்.

நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது, மூன்று மாணவர்கள் காப்பாற்றப்பட்டு கோமரன்கடவல வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய நான்கு மாணவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கோமரன்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.