நிதி நடவடிக்கையில் தொடர்ந்தும் முதல்நிலை பெறும் வடக்கு மாகாணம்

1 ed 4
1 ed 4

இலங்கையில் உள்ள மாகாணங்களின் நிதி நடவடிக்கையில் வடக்கு மாகாணமே தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் முதலாவது இடத்தைப் பெற்று விருதினைப் பெறுகின்றது.

2016, 2017ஆம் ஆண்டுகளில் மாகாணத் திணைக்களங்களின் கணக்கியலில் வடக்கு மாகாணமே முதலிடம் வகித்த நிலையில் மூன்றாம் முறையாக 2018ஆம் ஆண்டும் வடக்கு மாகாணமே முதலிடத்தை பிடித்துள்ளது.

இதேநேரம் 2017ஆம் ஆண்டு 95.09 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த வடக்கு மாகாணம் 2018ஆம் ஆண்டு இன்னும் முன்னேற்றம் அடைந்து 97.75 புள்ளிகளைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு முதலிடம் பிடித்தமைக்காக எதிர்வரும் 28 ஆம் திகதி நாடாளுமன்றக் கட்டடத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்சாவினால் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாணம் முதலிடம் பெற்றுள்ள அதேநேரம் கிழக்கு மாகாணம் இரண்டாம் இடத்தினையும் , மத்திய மாகாணம் 3ம் இடத்தினையும் பெற்றுள்ளது.