பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை ஏற்க முடியாது!

1 erw 1
1 erw 1

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்துள் இடம்பெற்ற பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை ஒரு போதும் ஏற்க முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

பகிடி வதை என்பதன் ஆரம்பம் என்பது அறிமுகத்திற்காகவே உருவானது புகுமுக மாணவர்களுடனான அறிமுகம் ஓர் சாதாரண விடயம் ஆனால் அறிமுகம் பகிடி வதையாக மாறி அது பாலியல் தொந்தரவாக அமைவதனை அனுமதிக்க முடியாது . அதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஏனெனில் இவ்வாறான ஓர் கலாசாரம் தலை தூக்க அனுமதிக்கப்பட்டால் அது பாரதூரமான விளைவாக அமையும். எனவே அதனை ஆரம்பத்திலேயே தடுப்பதே சிறந்தது. இதில் பல்கலைக் கழக நிர்வாகமே அதிக கவனமுடனும் பொறுப்புடனும் அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும்.

இதேநேரம் மாணவர் ஒன்றியங்கள் மீது நடவடிக்கை என்னும் பெயரில் அவர்களை நசுக்க முனைவதும் கண்டனத்திற்குரியது என குறிப்பிடப்பட்டுள்ளது .